இந்த ஓய்வறை கட்டி 26 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஓய்வறையில் பல இடங்களில் நீர் கசிவு மற்றும் பெயிண்ட் உதிர்ந்து காணப்பட்டது. இதனால் தேவஸ்தானம் சார்பில் காட்டேஜ் நன்கொடையாளர் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என கடந்த மார்ச் 21ம் தேதி தேவஸ்தானம் சார்பில் பெங்களூருவில் விட்டல் மல்லைய்யா சாலையில் உள்ள விஜய் மல்லைய்யா தங்கியிருந்த வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் விஜய் மல்லைய்யா
வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதால் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. அதனால் ஏப்ரல் 3ம் தேதி தேவஸ்தானம் அனுப்பிய நோட்டீஸ் திரும்பி வந்தது.
கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி, மல்லையாவுடன் தொடர்பை ஏற்படுத்த வழியின்றி ஓய்வறைக்கு வழங்கிய நிலத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் இந்த ஓய்வறையை புதுப்பிப்பதற்கும், புனரமைப்பதற்கும் ரூ.5 கோடி அல்லது அதற்கு மேல் நன்கொடை வழங்க முன்வரும் நன்கொடையாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
The post நன்கொடையில் கட்டிய விருந்தினர் மாளிகையில் நீர்க்கசிவு; திருமலையில் விஜய் மல்லையாவுக்கு வழங்கிய நிலத்துக்கான ஒப்பந்தம் ரத்து: பராமரிப்பு நோட்டீஸ் திரும்ப வந்ததால் தீர்மானம் appeared first on Dinakaran.