இதனால் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று மதியம் முதல் இன்று வரை 450 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஹாங்காங்கில் பள்ளிகள் திறப்பும் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. பங்கு சந்தைகளின் வர்த்தகமும் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
சூறாவளி எதிரொலியாக, ரயில் போக்குவரத்து சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை வரை இந்த மாகாணத்தில் ரயில்கள் வருவதற்கோ அல்லது ரயில்கள் புறப்பட்டு செல்வதற்கோ அனுமதிக்கப்படாது. இதனால், கடலோர பகுதிகளில் தீவிர வெள்ள பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று மெல்ல சூறாவளி பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகமும் குறையும்.
The post சாவோலா சூறாவளி எதிரொலி; ஹாங்காங்கில் 450 விமானங்கள் ரத்து; பள்ளிகள் மூடல் appeared first on Dinakaran.