கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர், இந்த கொடநாடு கொலைக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். அவர் சொல்லி தான் எனது தம்பி இந்த கொள்ளையில் ஈடுபட்டான். அவரை விசாரிக்க வேண்டும் எனவும், தனது தம்பி விபத்தில் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் விபத்து என மறைத்து விட்டனர் எனவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கையும் கூலிப்படை தலைவன் கனகராஜ் இறந்த வழக்கையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது. ஆத்தூரில் கனகராஜ் இறந்த வழக்கை சிபிசிஐடியின் கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆத்தூர், இடைப்பாடி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று இந்த விபத்து வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் சில சாட்சிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. பின்னர் கூடுதல் எஸ்.பி. முருகவேல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ. கார் டிரைவர் கனகராஜ் மர்மசாவு குறித்து விசாரணை: சேலத்தில் சாட்சிகளிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.
