சுங்க கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 26 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம்தேதி நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எனது கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காலாவதியான சுங்க சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும். சுங்க கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால் அனைத்து சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சுங்க கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: