மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்; சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு..!!

சென்னை: மருத்துவ சிகிச்சை முடிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பியதாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இருதய இரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்தது. மருத்துவ சிகிச்சை போதுமானது என முடிவு எடுக்கப்பட்டு, பிற்பகல் 2.10 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பினார். அதிகாலை நடைப்பயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது அமைச்சருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது.

The post மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்; சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: