கூட்டத்தில் பாஜ தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சியிலும் இத்திட்டத்தை அறிவித்துள்ளார்.
செருப்பு தைப்பவர் உள்பட பரம்பரை பரம்பரையாக 18 வகையான ஜாதி தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகக் கூறி ரூ.13 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. குரு-சிஷ்யப் பரம்பரை என்றும் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது 18 வயது அடைந்த பிள்ளைகளை மேற்கொண்டு கல்லூரியில் படிக்கவிடாமல் பரம்பரை ஜாதி தொழிலையே செய்யத் தூண்டும், குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இந்த திட்டத்தை எதிர்க்க முன்வர வேண்டும். முதற்கட்டமாக இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து அனைத்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் 6ம் தேதி சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
The post விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.