ஹேக்கிங் முயற்சியா? இங்கிலாந்து விமான போக்குவரத்து பாதிப்பால் குழப்பம் நீடிக்கும்: அரசு தகவல்

லண்டன்: இங்கிலாந்தில் விமான போக்குவரத்து தொழில்நுட்ப கோளாறு தீர்க்கப்பட்டாலும் அதனால் ஏற்பட்ட குழப்பம் நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தேசிய விமான போக்குவரத்து சேவைகளில் (என்ஏடிஎஸ்) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏறக்குறைய 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இதற்கு தீர்வு காணப்பட்டது. இதற்கு தீர்வு காணப்பட்டாலும், விமான நிறுவனங்கள் தங்களின் அட்டவணைகளில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும் சிக்கித் தவிக்கும் பயணிகளை மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கவும் போராடுவதால் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்ப கோளாறு குறித்து சமூக ஊடகங்களில் ஹேக்கிங் முயற்சியா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இங்கிலாந்து போக்குவரத்து அமைச்சர் மார்க் ஹார்ப்பர், “விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு செயலிழப்பு சைபர் பாதுகாப்பு சம்பவத்தால் ஏற்படவில்லை. மிக மோசமான விமான அமைப்புகளின் தோல்வியே இதற்கு காரணம். என்ன நடந்தது என்பது குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று தெரிவித்தார்.

The post ஹேக்கிங் முயற்சியா? இங்கிலாந்து விமான போக்குவரத்து பாதிப்பால் குழப்பம் நீடிக்கும்: அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: