பரனூர் சுங்கச்சாவடி வழியாக பயணித்த 53.27% வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாததும், சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் 36.43% வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை என கணக்கு எழுதப்பட்டுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக பயணித்த சுமார் 89 லட்சம் வாகனங்களில் 32 லட்சம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. நவீன ஊழியலின் அடையாளமாக பரனூர் சுங்கச்சாவடி விளங்குவதாக சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
The post செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் திடுக்கிடும் மோசடி அம்பலம்: 53% வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை appeared first on Dinakaran.
