எந்த ஒரு நோயாளியும் சிசிச்சை இல்லாமல் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. சுகாதார வழங்குநர்களை ஒரே தளத்தில் கொண்டுவந்து, சிறந்த சிகிச்சை வழங்குவதற்காான ஒரு முயற்சியாகும். இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைச் சங்கிலியை உருவாக்கி நடத்தி வருவதால், சுகாதாரப் பாதுகாப்பு உண்மைகளையும் சவால்களையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் அப்போலோவின் அற்புதமான சேவை ஆதரவின் மூலம் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களின் செயல்பாட்டு மற்றும் வணிகத் திறனை மேம்படுத்துவதற்காக அப்போலோ இணைப்பை வடிவமைத்துள்ளோம்.
ஒத்துழைப்பு என்பது மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும், மேலும் ஒன்றிணைவதன் மூலம், இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு சூழலை உண்மையிலேயே வலுப்படுத்த முடியும். ஒவ்வொரு தனிநபருக்கும் தேவையான சரியான ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post நாடு முழுவதும் மருத்துவமனை விரிவாக்கம் செய்ய ‘அப்போலோ கனெக்ட்’ திட்டம்: குழும தலைவர் பிரதாப் ரெட்டி தகவல் appeared first on Dinakaran.
