இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைப்பதை விட ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது. குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள், நாம் அனைவரும் ஒன்றாக அன்பை கற்பிக்க வேண்டும். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும், ‘எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு என்ன வகையான வகுப்பறை மற்றும் சமூகத்தை கொடுக்க விரும்புகிறோம்’ என சரமாரியாக கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கும் வைரல் வீடியோ: மாணவர்களின் மனதில் விஷத்தை விதைப்பதா?; ராகுல் கண்டனம் appeared first on Dinakaran.