குழந்தைகளை ஏற்றி வந்த 3 கார்களுக்கு அபராதம்

பள்ளிபாளையம்,ஆக.26: தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்துச்செல்லப்படுவதாக, குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலிக்கு, தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து வெப்படை பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமாருடன் வட்டார போக்குவரத்து அலுவலர் வாகன சோதனையில் ஈடுபட்டனார். இதில் நேற்று மாலை, பள்ளிக்கு அளவுக்கும் அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்த மூன்று வாகனங்களை அதிகாரிகள் பிடித்தனர். இந்த வாகனங்கள் மீது அனுமதி பெறாமல், பாதுகாப்பற்ற நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது. மூன்று கார்களின் உரிமையாளருக்கும் தலா ₹15 ஆயிரம் வீதம் ₹45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post குழந்தைகளை ஏற்றி வந்த 3 கார்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: