பாம்புக்கு மருத்துவ சிகிச்சை

 

ஆவடி, ஆக. 23: பட்டாபிராம் சார்லஸ் நகரில் வசித்து வருபவர் ரீனா கரோலினா. இவரது வீட்டில் உள்ள இரும்பு முள்வெளியில் சிக்கி அடிபட்ட நிலையில் சாரை பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். இதனையடுத்து பாம்பு பிடி வீரரான ரீகன், வரவழைக்கப்பட்டு, பாம்பு மீட்கப்பட்டது. மேலும் ஆவடி கால்நடை மருத்துவ மனையில் சாரைப்பாம்புக்கு மருத்துவ உதவி செய்து, மீண்டும் படப்பை வன பகுதியில் விடப்பட்டது. இதில், சாரைப்பாம்புக்கு மருந்துபோடும் வீடியோ தற்பொழுது வைரலாக சமூக வலை தளங்களில் உலா வருகிறது. பாம்புக்கு சிகிச்சையளித்து அதை உயிர்ப்பித்த ரீனா கரோலினா என்ற பெண்ணை மக்கள் வெகுவாக பாராட்டி பாம்பு நேயத்தை பாராட்டினர்.

The post பாம்புக்கு மருத்துவ சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: