மணிப்பூர் தேசிய சாலையில் தடைகள் அகற்றம்

இம்பால்: மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த தடைகள் அகற்றப்பட்டு விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூரின் இம்பாலை அசாமின் சில்சாருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 37, நாகலாந்தின் திமாபூருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாை எண் 2 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் அந்த தடைகள் படிப்படியாக அகற்றப்பட்டன.

பழங்குடியினத்தை சேர்ந்த குழுவினர் நேற்று முன்தினம் தமெங்லாங் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண்-37, காங்போக்பியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 2 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் மீண்டும் முற்றுகையிட்டு தடைகளை ஏற்படுத்தினர். இதனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்ற 170க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வது தடைப்பட்டன.
இதையடுத்து பழங்குடியினர் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை எண் 37ல் இருந்த தடைகள் அகற்றப்பட்டு விட்டன. தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் தடைகள் நீடிக்கின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

The post மணிப்பூர் தேசிய சாலையில் தடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: