அண்ணாநகர்: வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி (52). சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வந்தார். இவர், நேற்றிரவு கோயம்பேடு அருகே நெற்குன்றம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ், கண் இமைக்கும் நேரத்தில் கோபியின் பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே கோபி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுனரான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலப்பன் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பைக் மீது அரசு பஸ் மோதல் கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.
