ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி தேவர் சமூகத்தினருக்கு துரோகம் இழைத்ததாகவும், கொடநாடு கொலை வழக்கில் அவரை கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் முக்குலத்தோர் எழுச்சி கழகம், பசும்பொன் தேசிய கழகம், தென்னாட்டு மக்கள் கட்சி, பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம், முக்குலத்தோர் தேசிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் பேசும்போது, ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி ஆதரவாளர்களை தோற்கடிக்க வேண்டும். தென்மாவட்டங்களுக்கு எங்கு சென்றாலும் எடப்பாடிக்கு கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்போம்’’ என்றனர்.
The post எடப்பாடியை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: மதுரையில் பரபரப்பு appeared first on Dinakaran.