கால முறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக. 19: கால முறை ஊதியம் வழங்கிட கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 40 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்,குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் சகிலா, பர்வீன் சுல்தானா மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கால முறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: