அப்போது, சரக்கு ஆட்டோ முன்பாக சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். பட்டாசில் இருந்து தீப்பொறி ஒன்று சரக்கு ஆட்டோவினுள் விழுந்துள்ளது. இதனால் சரக்கு ஆட்டோவில் மூட்டையில் வைத்திருந்த நாட்டு வெடி மற்றும் பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் கருப்பாயி கொட்டாய் பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் விஜயகுமார்(21) உயிரிழந்தார். பரசுராமன், கார்த்தி மகள் பிரதக்ஷனா(6), அழகேசன் மகன் தர்ஷன், திருப்பதி மகள் யாசிகா(6), முனுசாமி மகன் நாகராஜ் ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.
The post நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் வாலிபர் பலி; 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.