புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம்

புழல்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தமிழகம் முழுவதும் நேற்று மாலை சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர் ஆகியோர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், புழல் ஊராட்சி ஒன்றியத்தின் பொருளாளர் பத்மினி தலைமையில், முன்னாள் சத்துணவு சங்க நிர்வாகிகள் அன்பு குமார், பத்மாவதி மற்றும் அனைத்து சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த கையெழுத்து போட்டனர். ரத்த கையெழுத்து படிவங்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மூலம் தமிழக முதல்வருக்கு விரைவில் அனுப்பப்படும் என சத்துணவு ஊழியர்களின் சங்கத்தினர் தெரிவித்தனர். இதேபோல் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சத்துணவு அமைப்பாளர்கள் சமையலர்கள், உதவியாளர்கள் ரத்த கையெழுத்து போட்டனர்.

The post புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: