கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பயங்கர வெடி சப்தம்: எஸ்.பி. மோகன்ராஜ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். 4 மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் வருகை தந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பயங்கர வெடி சப்தம்: எஸ்.பி. மோகன்ராஜ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: