சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபாய் செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 10 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.அப்போது, துபாய் பயணிகளை ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. மேலும், நீங்கள் சென்னையில் எடுத்துள்ள கொரோனா டெஸ்ட் 6 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும். இலங்கையில் கொரோனா டெஸ்ட் கட்டாயம் என தெரிவித்தனர். ஆனால் 42 பயணிகளும் இலங்கையில் 2வது டெஸ்ட் எடுக்க மறுப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 42 பயணிகளின் பயணத்தை லங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ரத்து செய்தனர். மற்ற 102 பயணிகளுடன் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 10.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட 42 பயணிகளும், லங்கன் ஏர்லைன்ஸ் கவுன்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்து 42 பயணிகளையும் துபாய்க்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்….
The post துபாய் பயணத்துக்கு 2 முறை டெஸ்ட் எடுக்க மறுப்பு இலங்கையில் கொரோனா டெஸ்ட் எடுக்க பயணிகள் மறுப்பு : சென்னையில் பரபரப்பு appeared first on Dinakaran.