மாவட்டம் முழுவதும் சூதாடிய 49 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஆக.15: கிருஷ்ணகிரி, ஓசூர், அட்கோ, சிப்காட், மத்திகிரி, பாகலூர், சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட 49 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21,990 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பர்கூர் எஸ்ஐ செல்வராகவன் மற்றும் போலீசார் தம்மகவுண்டனூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த சின்னப்பநாயுடுவின் மனைவி பொன்னம்மாள்(60) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ₹300 மதிப்பிலான 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்று கொண்டிருந்த சத்யா(35), நாராயணநகர் சொர்ணம்(51), சிங்காரப்பேட்டை நல்லாம்பட்டி கோவிந்தராசு(51) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மாவட்டம் முழுவதும் சூதாடிய 49 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: