ஆன்லைனில் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. கிளப்களில் மாலை நேரங்களில்தான் ரம்மி விளையாட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஆன்லைனில் எப்போதும் விளையாட முடியும் என்பதால் இதை முறைப்படுத்த இயலாது என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டது. ஆன்லைன் நிறுவனங்கள் மக்களை சுரண்டி சூதாட்டம் நடத்துவது அடிப்படை உரிமையல்ல. இந்த வழக்கு விசாரணைக்கு உகாந்ததல்ல என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை நிறைவு செய்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பதில் வாதத்தை தொடந்து வழக்கை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
The post சிறார் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கவர்ச்சிகர அறிவிப்பால் மக்களை அடிமையாக்கி சம்பாதிக்கின்றன: ஐகோர்டில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.