சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை கோட்டை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு

 

சென்னை, ஆக.14: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை கோட்டை அமைந்துள்ள காமராஜர் மற்றும் ராஜாஜி சாலைகளில் நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுதந்திர தினவிழா நிகழ்ச்சி சென்னை கோட்டையில் நடைபெற உள்ளதால், நாளை (15ம் தேதி) காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் நேரம் வரை கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.

* நேப்பியர் பாலம் முதல், போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.

* காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

* பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை (என்எப்எஸ் சாலை) ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, ஈவெரா சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

* அண்ணா சாலையிலிருந்து கொடிமரச் சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், என்எப்எஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை கோட்டை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: