ஜம்மு-காஷ்மீர்: அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் மிக்-29 போர் விமானப்படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குமுன் மிக்-21 விமானப்படை நிலை நிறுத்தப்பட்டிருந்தது. ‘காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதி நகர். தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயர்வான பகுதியில் உள்ளது. எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் அதிக எடை மற்றும் உந்துதல் விகிதம், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்றவைக்கு மூலோபாய ரீதியாக சிறந்தது.
மிக்-29 விமானப்படை இவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் என படைப்பிரிவு தலைவர் விபுல் சர்மா தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு பாலகோட்டில் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தாக்கி அழித்த மிக்-21எஸ் விமானத்தைவிட மிக்-29 பல நன்மைகள் உள்ளது. வானில் நீண்ட தூரம் சென்று தாக்குதல், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது. சண்டையின்போது எதிர் விமானங்களின் செயல்பாட்டை செயலிழக்க வைக்கும் தன்மை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020 கல்வான் தாக்குதலுக்கு பிறகு லடாக் பகுதியில் மிக்-29 எஸ் விமானப்படை நிலைநிறுத்தப்பட்டது.
The post அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஸ்ரீநகரில் மிக்29 போர் விமானங்கள் குவிப்பு appeared first on Dinakaran.
