திமுக அமைச்சர் எ.வ.வேலு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்: சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். திமுக அமைச்சர் எ.வ.வேலு பேச்சை குறிப்பிட்டு பிரதமர், அமைச்சர் ஸ்மிருதி பேசிய பேச்சை அவைக்குறிப்பில் நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி இருவரும், எ.வ.வேலு பேச்சை தவறாக மேற்கோள் காட்டி அவையை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோவையும் சபாநாயகருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அனுப்பி வைத்தார் .

The post திமுக அமைச்சர் எ.வ.வேலு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்: சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: