திருவேற்காடு கல்லூரியில் கார்கில் வெற்றி தின விழா கொண்டாட்டம்

திருவள்ளூர், ஆக. 10: திருவேற்காடு கல்லூரியில் கார்கில் வெற்றி தின விழா கொண்டாட்டப்பட்டது. சென்னை, திருவேற்காடு எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் சார்பில் இயங்கும் திறன் மேம்பாட்டுக் குழுவின் சார்பாகக் கார்கில் வெற்றி தின விழா கல்லூரியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் முன்னிலை வகித்தார். இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அனைவரையும் வரவேற்றார். விழாவில் இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்புகள் குறித்து ஓய்வு பெற்ற ராணுவ விங் கமாண்டரும், ஏரோ ஸ்பேஸ் பயிற்சியகத்தின் தலைமை நிர்வாக இயக்குநருமான காந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். அப்போது இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் போரில் துரிதமாகவும், அதி நுட்பமாகவும் போரிட்டு எதிரிகளை வீழ்த்திய விதங்கள் குறித்து எடுத்துக் கூறியது மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை வளர்க்கும்படி அமைந்திருந்தது. விழா நிறைவில் எல்லையைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் எம்.சரவணன் குறித்த அஞ்சலிக் கவிதையை மாணவர் வாசிக்க அனைத்து மாணவர்களும் புகழஞ்சலி செலுத்தினார்கள்.

The post திருவேற்காடு கல்லூரியில் கார்கில் வெற்றி தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: