செவிலியரிடம் செயின் பறிப்பு

 

உளுந்தூர்பேட்டை, ஆக. 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது காட்டு எடையார் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் புதுச்சேரி மாநிலம் சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் வனஜா(24) இவர் சம்பவத்தன்று ஒரு இருசக்கர வாகனத்தில் காட்டுஎடையார் கிராமத்தில் இருந்து எலவனாசூர்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார். புகைப்பட்டி கிராமத்தில் உள்ள வேகத்தடை அருகில் சென்ற போது மர்ம நபர் ஒருவர் வனஜாவின் கழுத்தில் இருந்த ஒன்றே முக்கால் பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இது குறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

The post செவிலியரிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: