வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம்? : கே.சி.வேணுகோபால் பேட்டி

டெல்லி: வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் முன்னோடிகள் பங்கேற்கவே இல்லை. விடுதலை போராட்டத்துக்கு முற்றிலும் எதிராக இருந்தவர்கள் பாஜகவின் முன்னோடிகள். வெள்ளையனே வெளியேறு போராட்ட நாளில் பாஜக பேசுவதில் ஏதாவது பொருள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சுதந்திர போராட்டத்தில் முக்கியமான நாளான இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் விவாதம் நடத்த கோருகிறோம். நாடாளுமன்றத்துக்குக் கூட பிரதமர் மோடி வருவதில்லை; மணிப்பூர் பிரச்சனை பற்றி பேசுவதும் இல்லை. வெள்ளையனே வெளியேறு போராட்ட நாளான இன்று பாஜக ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

The post வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம்? : கே.சி.வேணுகோபால் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: