சாதித்த கோவை மாணவி!

ஆசிய சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் போட்டியில் கோவை வீராங்கனை தன்யதா வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஆசியா சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் 2023 போட்டி மலேசியாவில் ஜூன் 14ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழகத்திலிருந்து 12ம் வகுப்பு மாணவி கோவை வீராங்கனை தன்யதா (17) கலந்து கொண்டார். இதில் இந்திய அணியின் 37 ரைடர்களில் ஜூனியர் தனிநபர் பிரிவில் தன்யதா பங்கேற்று 2.28.861 நிமிடத்தில் 2 கி.மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய அளவிலான டிராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இரவு விமானம் மூலம் கோவை வந்த வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தன்யதா கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தி.மு.க செயலாளர் சுரேஷ்குமார் – இன்ஸ்பெக்டர் பிரியம்வதா தம்பதியரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பில் முதன்முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற கோவையைச் சேர்ந்த JP தன்யதாவை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

The post சாதித்த கோவை மாணவி! appeared first on Dinakaran.

Related Stories: