இருவரின் கணவர்களே நிர்வாகம் செய்து வருகின்றனர். வார்டுகளுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் இவர்கள் செய்து தருவது இல்லை. ஊராட்சி நிர்வாகத்திற்கு அரசிடம் இருந்து நிதி வந்தாலும் அதனை கவுன்சிலர்களிடம் சொல்வதும் இல்லை. ஆனால் தலைவர், துணைத்தலைவர் வார்டுகளில் மட்டும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொள்கின்றனர். இதுகுறித்து தலைவரிடம் கேட்டால் சரியாக பதில் சொல்வதில்லை. மேலும் அலுவலகத்திற்கும் வருவது கிடையாது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜினாமா கடிதம் அளித்தோம்’’ என்றனர். கடிதத்தை பெற்றுக் கொண்ட கலெக்டர், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.
The post அதிமுக பஞ். தலைவரை கண்டித்து 5 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் appeared first on Dinakaran.