பழைய பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதுதவிர நவால்னி மீது மோசடி மற்றும் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் பதியப்பட்டு, மேலும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நவால்னி மாஸ்கோவின் கிழக்கே உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு துணை போனதாக கூறி அலெக்சி நவால்னி மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
The post ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறை appeared first on Dinakaran.