அதிமுக கூட்டணியில் பாமக இல்லை: அன்புமணி

மதுரை: அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என்று அன்புமணி தெரிவித்து உள்ளார். நெய்வேலி என்எல்சி முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கைதானவர்களில் கட்சியினர் 18 பேர், மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பாமகவை சேர்ந்த 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுவிக்க வேண்டும். என்எல்சிக்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது. என்எல்சி நிலக்கரி எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது. 3 போகம் விளையும் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. என்எல்சி 3ம் சுரங்கம் அமையுமா, அமையாதா என தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும், என்எல்சி பிரச்னை தமிழ்நாடு மக்களின் பிரச்னை. விளைநிலங்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது.

என்எல்சி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. பாமக அரசியல் நோக்குடன் போராடவில்லை. மண்ணுக்கும், மக்களுக்கும் பிரச்னை என்றால் பாமக போராடும். ராகுல்காந்திக்கு கிடைத்தது மிகப்பெரிய தண்டனை. சாதாரண வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது. ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பு விபரம் தெரியவில்லை. தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் பேசுகிறேன். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை. தமிழகத்தில் யாருடனும் (அதிமுக) கூட்டணியில் இல்லை. 2026ல் ஒருமித்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் பாமக தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அதிமுக கூட்டணியில் பாமக இல்லை: அன்புமணி appeared first on Dinakaran.

Related Stories: