250 குடிசை இடிப்பு: நூஹ் மாவட்டத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து தவுரு நகரில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 250 சட்ட விரோத குடிசைகளை மாநில அரசு அதிகாரிகள் நேற்று அகற்றினர். அந்த குடிசையில் வசித்தவர்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கலவரம் எதிரொலியாக தான் குடிசைகள் இடிக்கப்பட்டது என்று கூறப்படுவதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் பவார் மறுத்துள்ளார். எஸ்பி மாற்றம்: இதற்கிடையே,நூஹ் மாவட்ட எஸ்பி வருண் சிங்க்லா மாற்றப்பட்டு நரேந்திர பிஜர்னியா புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக்கமிஷனர் பிரசாந்த் பன்வாரும் மாற்றப்பட்டுள்ளார். புதிய துணை கமிஷனராக ஐஏஎஸ் அதிகாரி திரேந்திரா கத்கதா நியமிக்கப்பட்டுள்ளார்.
The post அரியானா கலவரத்தில் 200 பேர் கைது: மாநில உள்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.