திருப்பதி கோயிலில் இந்த ஆண்டு ரூ.827 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கடந்த 2020-21ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் உண்டியல் காணிக்கை சில லட்சங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் கொரோனா முடிந்த பின்னர் உண்டியல் காணிக்கை மூலம் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 7 மாதங்களில் ரூ.827 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி ஒரேநாளில் ரூ.7.68 கோடி காணிக்கை கிடைத்தது.

The post திருப்பதி கோயிலில் இந்த ஆண்டு ரூ.827 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: