இதில், படுகாயமடைந்த அவர், அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர். இதை பார்த்த அசோக் அங்கு இருந்து தப்பி சென்றார். இதனையடுத்து, கலைவாணியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அசோக்கை கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post குடும்ப தகராறில் விபரீதம் அண்ணிக்கு கத்திக்குத்து: மைத்துனர் கைது appeared first on Dinakaran.