இந்தியாவிற்கும் இந்த தம்பதியினர் அரசு முறை பயணமாகவும் சுற்றுலாவிற்காகவும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அவரது மனைவி சோஃபி கலந்து கொள்ளாதது பேசும் பொருளானது. இந்த நிலையில் மனைவி சோஃபியும் தானும் பிரிந்து வாழ போவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இது குறித்து இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டுள்ள அவர், நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். வரும் காலத்திலும் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி கொள்வோம் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். தங்களது குழந்தைகளின் தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பு கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post மனைவியை பிரிகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: 18 ஆண்டுகால மண வாழ்க்கைக்கு முடிவு appeared first on Dinakaran.