யாரேனும், எங்கேனும் ஊழலை கண்டால் அதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம். அந்த புகார்கள் குறித்து ஆளுநர் மாளிகை உரிய அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கும்” என்று தெரிவித்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா கூறியதாவது, “ஆளுநர் மாளிகையில் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்கியிருப்பது மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடும் செயல். ஆளுநர் முகமூடி அணிந்து கொண்டு பாஜ தலைமையின் அறிவுறுத்தல்படி செயல்படுகிறார். மாநில உரிமைகளில் தேவையின்றி தலையிடுகிறார். ஆளுநரின் பொறுப்புகள் பற்றி அரசியல் அமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவு திறப்பது ஆளுநர் மாளிகையின் வேலையில்லை” என்று கடுமையாக சாடியுள்ளார்.
The post குரலற்றவர்களுக்காக குரல் கொடுப்போம் என ஆளுநர் போஸ் பேச்சு மே.வங்க ராஜ்பவனில் ஊழல் தடுப்பு பிரிவு தொடக்கம்: மம்தா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.