நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. மணிப்பூர் விவாகரத்துக்கு தீர்வுகாண குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம். மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் விவாதம் நடந்த எதிர்க்கட்சிகள் வலிறுத்தி வருகின்றனர். விதி எண் 267-ன் கீழ் விவாதம் நடத்த ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மணிப்பூர் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மணிப்பூர் அமைதியை நிலைநாட்ட குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற கலவரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய, மாநில அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினர்.
The post நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லாத நிலை உருவாகி உள்ளது: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்தபின் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி appeared first on Dinakaran.