எப்போதும் நஷ்டத்தை கொடுத்துவிட்டு போகும் விவசாயம் இந்தமுறை சந்திர மெளலியை கோடீஸ்வரராகி இருக்கிறது. வெறும் 45 நாட்களில் அவர் ரூ.4 கோடிக்கு அதிபதியாகியுள்ளார். இவரது தோட்டத்தில் விளைந்த தக்காளி கர்நாடகாவின் கோலார் சந்தையில் 15 கிலோ பெட்டி ரூ.1,000-லிருந்து ரூ.1,500-க்கு விற்பனையானது. மொத்தம் 40,000 பெட்டிகளை அவர் சுமார் ரூ.4 கோடிக்கு விற்பனை செய்தார். இதில் முதலீடு ரூ.70 லட்சம், கமிஷன் ரூ.20 லட்சம், போக்குவரத்து செலவு, பாதுகாப்புக்கு ரூ.10 லட்சம் போக தனக்கு ரூ.3 கோடி லாபம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் விவசாயி சந்திர மெளலி.
The post ஆந்திராவில் வெறும் 45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்த சித்தூர் தக்காளி விவசாயி: சாகுபடிச் செலவுபோக ரூ.3 கோடி லாபம் கிடைத்ததாக உற்சாகம் appeared first on Dinakaran.
