பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்று: தேர்வு துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ-மாணவியருக்கான அசல் மதிப்பெண் சான்றுகள் அந்தந்த பள்ளிகளில் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் பிளஸ் 2ல் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றுகள் ஜூலை மாதம் 31ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் மூலம் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, அசல் மதிப்பெண் சான்றுகள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

The post பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்று: தேர்வு துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: