வே.பாளையத்தில் ஆக.1ல் யோகா பயிற்சி

வேலாயுதம்பாளையம், ஜூலை 30: வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் தவ மையம் சார்பில், காமாட்சி திருமண மண்டபத்தில் காயகல்ப யோகா பயிற்சி வரும் 1ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இப்பயிற்சியில், ‘ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொண்டோமா, உறவுகளே இனிமையாக வாழ கற்றுக் கொண்டோமா, வாழ்வை மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொண்டோமா, மனதை அமைதியாக மாற்ற கற்றுக் கொண்டோமா’ என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறப்பு காயகல்ப யோகா பயிற்சி நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் தவ மைய அமைப்பாளர் சுப்பையன் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post வே.பாளையத்தில் ஆக.1ல் யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: