மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் மருத்துவமனையில் அட்மிட்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா(79). மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு நேற்று மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,‘‘ புத்ததேவ் நேற்று திடீரென நியநினைவு இழந்தார். இதைதொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது’’ என்றனர். கடந்த 2000ம் ஆண்டு 2011ம் ஆண்டு வரை இவர் முதல்வராக இருந்தார். வயது முதிர்வு தொடர்பான பல்வேறு உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள இவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.

Related Stories: