செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணி 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணி காரணமாக 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வள துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில், வரும் 31ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.1ம் தேதி காலை 8 வரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்று கொள்ள வாரியத்தின் cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இதேபோல், பல்லாவரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளுக்கும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணி 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: