3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது

திருத்தணி: பள்ளி மாணவியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய 3 குழந்தைகளின் தந்தை போஸ்சோவில் கைது செய்யப்பட்டார். பள்ளிப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி, பொதட்டூர்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் கஜா(30). இவர் பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என, அந்த மாணவியிடம் பேருந்து நிலையத்தில் கையைப் பிடித்து அத்துமீறி செயல்ப்பட்டுள்ளார். இது குறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், கஜாவை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்ட கஜாவுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: