தொடர்ந்து அண்ணாமலை தலைமையில் ஊர்வலமாக செல்லும் கட்சி தொண்டர்கள் நகரில் பல்வேறு வீதிகளுக்கு சென்று இரவில் ராமநாதசுவாமி கோயில் மேற்கு கோபுர வாயிலில் முடிக்கின்றனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்டோர் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். நாளை காலை அண்ணாமலை தலைமையிலான குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து காரில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் சென்று மீனவ மக்களிடம் பேசிவிட்டு யாத்திரையை தொடர்கின்றனர். அமித்ஷா வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
The post அண்ணாமலை பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் இன்று துவக்கம்: அமித்ஷா தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.