கார்கில் போரின் வெற்றி தினமாக இன்று அனுசரிக்கபடுவதை முன்னிட்டு கார்கில் போரில் கலந்து கொண்டு வீர மரணமடைந்த திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனின் நினைவு தூண் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ளது. விமானநிலையத்தில் இருந்து நேரடியாக அங்குவந்த முதலமைச்சர் மேஜர் சரவணனின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுதினார்.
இதில் முதலமைச்சருடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post கார்கில் போரின்போது வீரமரணம் அடைந்த, திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனின் நினைவுத்தூணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை! appeared first on Dinakaran.