வழக்கமாக விமானத்தில் சாதனையாளர்கள் போன்றவர்கள் இருந்தால் அவர்களை அந்த விமான நிறுவனம் கவுரவப்படுத்தும். அதன்படி, பரம்வீர் சக்ரா விருது பெற்ற சஞ்சய் குமாரை விமான கேப்டன், துணை கேப்டன், ஏர் ஹோஸ்டஸ் மற்றும் ஊழியர்கள் கவுரவித்தனர். அப்போது, விமானத்தில் இருந்தவர்கள் கை தட்டி அவருக்கு மரியாதை செய்தனர். பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களில் சஞ்சய் குமார் மட்டும்தான் இன்னும் ராணுவத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் குமார் கவுரவிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The post தனி ஆளாக பாகிஸ்தான் பங்கருக்குள் புகுந்தவர்: கார்கில் ஹீரோவுக்கு விமானத்தில் கவுரவம் appeared first on Dinakaran.