இந்த நிலையில் மணிப்பூரில் அரங்கேறிய கொடூரம் கவலை அடைய செய்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்க அரசு, கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. அந்த சம்பவம் மிருகத்தனமானது மற்றும் பயங்கரமானது என விவரித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, அங்கு உள்ள அனைத்து தரப்பு மக்களின் வீடுகள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
The post மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் மிருகத்தனமானது… அமெரிக்கா கடும் கண்டனம்!! appeared first on Dinakaran.