தீவிபத்தில் கூரை வீடு சேதம்

கடலூர், ஜூலை 25: கடலூர் முதுநகர் அருகே உள்ள புருகீஸ்பேட்டை, கேப்பர் மலை சாலையை சேர்ந்தவர் தயாளன் (54). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது திடீரென இவரது கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீவிபத்தில் கூரை வீடு சேதம் appeared first on Dinakaran.

Related Stories: