இதைத்தொடர்ந்து நேற்று மாலை பாமாவின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் அருகே உள்ள ஈசனக்குடிக்கு இருவரும் வாடகை காரில் புறப்பட்டனர். செல்லும் வழியிலேயே இருவரும் குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்தனர். பின்னர் ஈசனக்குடி சென்ற நிலையில் காரில் இருந்து இறங்கினர். அப்போது இருவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் உறவினர்கள் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு பாமாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோமசுந்தரமும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலறிந்த விக்கிரபாண்டியம் போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கவனிக்க ஆள் இல்லாததால் ஓடும் காரில் விஷம் குடித்து வக்கீல் பெற்றோர் தற்கொலை appeared first on Dinakaran.